திங்கள், 28 பிப்ரவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –399: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –399: குறள் கூறும்பொருள்பெறு.

 

341

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.


ஒருவன் யாதொன்றின் மீது பற்றின்றி விலகியிருக்கின்றானோ அவனுக்கு அஃதொன்றால் துன்பம் விளைவதில்லை. பற்றினால் துன்பம் பற்றும்.


துறவுக்கு முதற்பகை ஆசையே.       


ஆசை என்னும் பெருங் காற்றூடு இலவம் பஞ்சு

 எனவும் மனது அலையும்

 மோசம் வரும்….” தாயுமானவர்.


பெருங்காற்றில் இலவம் பஞ்சு பறப்பது போல் ஆசையுள்பட்ட  மனதும் பறக்கும் ; ஈன வழிகளில் இழுத்துச் செல்லும் ; இறைவனை அடையவொட்டாது தடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக