ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –3978: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –3978: குறள் கூறும்பொருள்பெறு.

324

 

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.


நன்னெறி எனப்படுவது யாதெனின், எந்த உயிரையும் கொல்லக்கூடாது  என்னும் உறுதியைக் கொள்கையாகக் கொண்டொழுகுதலே ஆம்.

ஓர் உயிரைக் கொன்று உண்ணல்அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கையாம்.


நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை….”ஆசாரக்கோவை, 1.


 செய்ந்நன்றி அறிதலும் போற்றாரையும்  பொறுத்துக் கொள்ளும் பெருந்தன்மையும் கனிபோலும் இனிய சொற்களையே பேசுதலும் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியன  சான்றோர்க்கு உரிய குணங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக