தமிழமுது –178 – தொல்தமிழர் இசை மரபு:
சான்றோர் ஆய்வுரை – 38
தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.
இராகம்,சுரம், சுருதி. ஆய்வுரை.
- நாலுவிதமாம், அவை மருதப்பண், குறிஞ்சிப்பண், நெய்தற்பண், பாலைப்பண் என்பவையாகும். அவைகளை மருதயாழ், குறிஞ்சியாழ், நெய்தல்யாழ், பாலையாழ் என்றும் கூறுவர்.
ஜாதிப்பண்கள்:- அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நாலாம். மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நால்வித யாழ் பேதத்தால் பதினாறு வகையாகும். அவை அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் அகநிலைக்குறிஞ்சி, புறநிலைக்குறிஞ்சி என்றாற்போல அந்தந்த யாழின் பெயர்களை அடுத்து வரும்.
வண்ணப்பட்டடை:- என்றது பஞ்சமமுறையை. அது ஆதியாய் ஒன்றாய் நின்ற சட்சமத்திற்கு ஒன்றரையாய்ச் சேரும் பஞ்சமம் மிகுந்த பொருத்தமுடையதாய் அம்முறையே சுரங்கள் யாவுங்கண்டுபிடிப்பதற்கு ஆதியாயிருந்ததினால் அடிமணை என்று பெயர் பெற்றது. வண்ணம் என்பது நிறம் அல்லது சுரங்களுக்குப் பெயர். பட்டடை நரம்புகளில் இிளி அதாவது பஞ்சமத்திற்குப் பெயர். ஆகவே, பஞ்சம முறைப்படிச் சுரங்களை அமைத்தல் என்று பொருள் கொள்க.
மூவகை இயக்கு :- வலிவு, மெலிவு, சமன் என்னும் மூன்று ஸ்தாயிகள். கேள்வி:- கேட்கப்படுகிறதினால் கேள்வி என்று பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்தார்கள். ஓர் அலகுள்ள ஓசைக்குப்பெயர் , இதனைத் தற்காலத்தார் சுருதி என்பர்.
யாழுறுப்புகள் :- கோடு, மாடகம், நரம்பு, பத்தர், ஆணி. (கோடு - யாழின் தண்டு, மாடகம் - முறுக்காணி, நரம்பு - தந்தி, தந்திரி, யாழ் நரம்பு., பத்தர்-குடம்.)
யாழ்வகை:- பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ், நாரத யாழ். தும்புரு யாழ், கீசக யாழ், மருத்துவ யாழ்,
கலைத்தொழில் :- கலைத்தொழில் எட்டு, செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம், குழல், தண்ணுமை, முழவு, பண், பெருந்தான மெட்டு, கிரிகை எட்டு, நிலம், கலம், யாழ், கண்டம், பாணி, பாணியின் அங்கங்கள், சுவை ஒன்பது, அவிநயம், குடமுதல்,
மேற்குறித்துள்ள கலைச்சொற்களின் ஆய்வுரை விளக்கங்களை இசைப் பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் “கருணாமிர்த சாகரம்” நூலின் மூன்றாம்பாகத்தில் விவாகக் காணலாம். (ப. தண்டபாணி, தமிழ்க்கீர்த்தனைகள், ப.18-28.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக