வியாழன், 8 ஜனவரி, 2026

தமிழமுது –179– தொல்தமிழர் இசை மரபு: 39. ..தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர்.

 தமிழமுது –179– தொல்தமிழர் இசை மரபு: 39. 

தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர் 

  “  ாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்  

பாடல் சான்ற  புலனெறி வழக்கம் 

கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் 

உரியதாகும் என்மனார் புலவர்.” - 999. 

 புனைந்துரை வகையானும் உலகியல் வழக்கானும்  பாடல் சான்ற இலக்கண மரபான் அமைந்த ஒழுகலாறுகள் கலிப்பாபரிபாட்டு என்னும் அவ்விரு பாக்களானும் கூறுவதற்குரியவாகும் எனக் கூறுவர் றிவுடையோர். என்றவாறு தொல்தமிழரின் இசை மரபு செழித்திருந்த காலத்தே அவற்று இலக்கணம் வகுத்துள்ளார். ொல்காப்பியர்  வகுத்தளித்த தொல்தமிழர் இசை குறித்து கூறிய கருத்துகள்தமிழ் நிலம் ஐந்து என்றாலும் பாலை எனும் நிலம் தமிழ் நிலத்தில் இல்லை. 

அவற்றுள் 

 நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப் 

படுதிரை வையம் பாத்திய பண்பே” - 948. 

அகப்பொருள் திணைகள் ஏழாயினும் அவற்றுள் நடுவில் இருக்கும் குறிஞ்சிமுல்லபாலைமருதம்நெய்தல் என்ற ஐந்து திணைகளுள் நடுவில் இருக்கும் பாலை நீங்கலாக கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் படைத்துக்கொண்டனர்.  

 ”  முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே 

நுவலுங் காலை முறைசிறந்தனவே 

பாடலுள் பயின்றவை நாடுங்காலை.” -949. 

முதற்பொருள்கருப்பொருள்உரிப்பொருள் என முறையாகச் சொல்லும் நிலையில்இலக்கியத்துள்  வழங்கியவற்றைக் கருதி  அமைத்துக்கொண்டனர். 

முதற்பொருள்: 

்  முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின் 

இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே.” -950. 

ு முதல் பொருள் எனக்கூறப்பெறுவதைநிலம்பொழுது என இரண்டின் தன்மை எனக்கூறுவர் அவற்றின் இயல்பினை நன்கு அறிந்தோர். 

   கருப்பொருள்:- 

      தெய்வம் உணாவே மா மரம் புள் பற் 

      செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ  

அவ்வகை பிறவும் கருவென மொழிப. - 964. 

      தெய்வம்உணவுவிலங்குகள்மரம் செடி கொடிகள்பறவைதோற்கருவிகள்தொழில்யாழ்போன்ற நரம்புக் கருவிகள்ஊர்நீர்பூ போன்றனவும் கருப்பொருள் என்று கூறுவர். 

  தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடத்து  இசைக் கருவிகளோடு கூடிய ஆடலும் பாடலும்  நிலம்தொறும் செழித்திருந்தன என்பதை அறியமுடிகின்றது.  

               .............................தொடரும்............................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக