சான்றோர் வாய் (மை) மொழி :
184–அறிவியல் சிந்தனைகள்: போயாதிஸ் - Boethius –கி.பி.
480-524.
இவர் பல்துறை வித்தகர் – சிறந்த அரசியல்வாதி - இலக்கியவாதி
-தத்துவகர்த்தர் – சிறந்த சிந்தனையாளர்.
’தத்துவ ஆறுதல்’ எனும் நூலின்
ஆசிரியர். சிறையில் வாடியபோது சிந்தனைத் தெளிவு ஏற்பட்டது.
துன்பத்தில் தத்துவ மங்கையின் ஆறுதல் கிடைத்தது.
“வாழ்வின் முழுப் பரிணாமத்தையும் மனிதனால்
அறிய முடியாது. வாழ்வை முழுமையாகக் காணும் வல்லமை பெற்ற இறைவனுக்கு
மட்டுமே நன்மை தீமை எதுவென்று தெரியும்.”
“கொடியவர்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்வது போல்
தோன்றும், அஃது உண்மையன்று. அன்பின்மை காரணமாக
ஆன்மிக வாழ்வில் சவமாகிவிட்ட அவர்களால் உலகியலிலும் உண்மை வாழவைப் பெறமுடியாது.
இறைவன் ஆணையே எல்லாவற்றையும் படைக்கிறது.”
இவையே இவரின் தூய சிந்தனையின் வெளிப்பாடுகளாகும்.
……………………….தொடரும்…………………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக