வியாழன், 29 செப்டம்பர், 2011

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்..-2

சித்திரை எப்படி ஆண்டின் தொடக்கமாயிற்று என்பது ஒருபுறம் இருக்க , தமிழர்களின் காலப் பகுப்பின்படி, சித்திரையும் வைகாசியும்  இளவேனிற் காலமாகும்.வறட்சியும் கதிரவனும் வாட்டி எடுக்கும் காலம வளம் குன்றிய காலம். வாழ்வில் மகிழ்ச்சி எப்படி இருக்கும்?.இந்நிலையில் புத்தாண்டு பிறந்தால் கொண்டாட முடியுமா? அதனாலன்றோ  - மாசியும் பங்குனியும் மத்தளக் கொட்டு, சித்திரை பொறந்தோன குப்புறக் கொட்டு, என்னும் பழமொழி தோன்றிற்று. தை பொறந்தா வழி பொறக்கும்  என்று தமிழ் உழவன் வகுத்த விதி உலகப்..பொது விதியாகத் திகழ்கின்றது, உழவனே உலகை அளந்தவன், அறிந்தவன். அவன் வகுத்த அளவைகள் கணக்கியலை ஆளுகின்றன. 6, 12, 24, 60, 360 . நாழிகை (படி) 60. அல்லும் பகலும் 60 நாழிகை.. ஒரு மணிக்கு 2 1/2 நாழிகை கணக்கு இன்றும் சரியாக இருக்கிறதே.உழவின் வயது 9,000 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள்.. உலகம் முழுதும் அறுவடை நாள் தான் ஆண்டின் தொடக்கமாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது.உலகின் தொல் வரலாறு குறித்துப் பேசும் இரஷ்ய அறிஞர் “ How time was measured in ancient times- Land tillers knew that summer, the harvest time, occurred regularly. They counted time by periods from one harvest to the next.That was how time began to be counted by years. என்று கூறுகின்றார். அறுவடைத் திங்களை ஆண்டின் தொடக்கமாகக் கொள்வது பொருத்தம் தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக