திங்கள், 3 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -5

இளந்தேவனார் நற்றிணையில்..
 தலைவி, இரவில் வந்த விருந்தினர்க்குக் கறி சோறு சமைத்து விருந்திட்ட செய்தியை 
எல்லி வந்த நல்லிசை விருந்திற்கு
கிளரிழை அரிவை நெய் துழந்தட்ட
விளர் ஊன் அம்புகை எறிந்த நெற்றி
சிறுநுண் பல்வியர் பொறித்த - என்று குறித்துள்ளார்.
இரவில் வந்த புகழுடைய விருந்தினர் உண்பதற்கு நீ நெய்யை விட்டுக் கிளரிய ஊனைச் சமைத்ததனால் உண்டான புகை உன் நெற்றியில் பட்டுப் பல வியர்வைத் துளிகளைத் தோற்றுவித்தது ,என்று தோழி கூறுவாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக