செவ்வாய், 4 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -6

நற்றிணைக்கு உரை வகுத்த உரையாசிரியர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்,  166 ஆம் பாடலைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது
“ இனி இச்செய்யுளுக்கு ஒப்பான சிறந்த செய்யுள் கிடைத்தல் அரிது, தமிழ் இலக்கியத்தின் மணிமுடியாக இதனைக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.உரையாசிரியரின் மனத்தைக் கவர்ந்த இந்தப் பாடலை யாத்த புலவர் இன்னாரென்று தெரியவில்லை.. தன்னைத் தன் புலமையால் நிலை நிறுத்திய சான்றோன் தந்த பாடல்....
பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழநின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவைகாண் தோறும் அகமலிந்து யானும்
அறநிலை பெற்றோர் அனையோன் அதன்தலைப்
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத்து  இலனே நினையின்
யாதனிற் பிரிவாம் மடந்தை
காதல் தானுங் கடலினும் பெரிதே.
இப்பாடல், செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது என்னும் துறையில் அமைந்ததாகும்
தலைவியின் அழகு கண்டு மகிழும் தலைவன், புதல்வனைக் கண்டு 
                                                                                                               ...தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக