திங்கள், 24 அக்டோபர், 2011

கூத்தாடிகளால் குட்டிச் சுவரான தமிழ்நாடு-1

24 மணி நேரமும் திரைப்படங்கள் எங்கெங்கு காணினும் திரைக் காட்சிகள்க் காட்சிப் பெட்டிகளால் இல்லம் தோறும் கூத்தாடிக் கொடுமைகள்- நாடு உருப்படுமா?. மின்னணு யுகத்தில் தொலைக்காட்சியையும் கைப்பேசியையும் மிகக் கேவலமாகப் பயன்படுத்தும் போக்கு.. சகிக்கமுடியாத. இந்நிலை மாற வேண்டும் , மாற்றியே ஆகவேண்டும்.. கூத்தாடிகளின் குடியிருப்பாகிப் போன தொலைக்காட்சிகள்..அறிவியலின் ஆழ அகலங்களை அளந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் தமிழ்த் தொலைக்காட்சிகள் அசிங்க ஆபாச  குத்தாட்ட சூதாட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. கூத்தாடிகளின் தொலைக் காட்சிகள் கூத்தாடிக் குடும்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. கூத்தாடிகள் எந்தவகையில் நாட்டை ஆளத் தகுதி உடையவர்கள்?.

1 கருத்து:

  1. காட்டமாக இருப்பினும் மறுக்கவியலாத உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் முகநூலில் இருக்கிறீர்களா என்று தெரியாது.. நீங்கள் தினமொரு செய்தியாவது தமிழறிந்தவர்களுக்காக வழங்கலாமே.. பகிர்தலின் மூலம் பரவுமே மெல்ல, ஆனால் உறுதியாக..

    பதிலளிநீக்கு