செவ்வாய், 18 அக்டோபர், 2011

களந்தை (களப்பாள்) வரலாறு

கடல் புடை  சூழ்ந்த நெடுநிலவுலகிலே எந்நாட்டினுஞ் சிறந்த சோழ வள நாட்டிலே, காவிரி நதிக்குத் தெற்கிலே, தஞ்சாவூர் ஜில்லாவிலே, மன்னார்குடி தாலுகாவிலே, திருத்துறைப்பூண்டிக்கு (நான்கு மைல்) மேற்கிலே, விளங்காநின்ற திருக்களர் தலத்திற்கு க் கூப்பிடு தூரத்திலே களந்தைப் பதியில் சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன் தருமபுரவாதீனத்திலே (அழகிய சிற்றம்பல தேசிகர் காலத்திலே) வித்துவானாயிருந்த (களந்தை) ஆதியப்பரென்பவர் வடமொழியிலிருந்து தென்மொழிச் செய்யுள் நடையில் பெயர்த்திருந்த புராணத்தையும்..................(தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர்,முகவுரை, திருக்களர்ப் புராணம்,1912)
களந்தை ஆதியப்பனாரியற்றிய திருக்களர்ப் புராணம் - சிறப்புப் பாயிரம்
கருணைமிகு நந்தியுரைப் படிசூத மாமுனிவன் கழறுமாறே
த்ருமைவரு மழகியசிற் றம்பலாற் குருவருளே தரித்துநாறு
முருகனெனக் கலையுணர்ந்த சரவணமா முனியருளான் மொழிகென் றோத
விருநிலத்தி லுயர்களந்தை யாதியப்பன் பசுந்தமிழா லியம்பல் செய்தான்.
அருந் தவப் புதல்வனாய்த் தோன்றி அருந் தமிழுக்குத் தொண்டற்றிய  புலவர்ஆதியப்பனார் பிறந்து சிறந்த ஊர் எம் ஊர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக