வெள்ளி, 28 அக்டோபர், 2011

போரில் உயிர் துறத்தல்..

நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்பிறர்    கொளவிளிந் தோரென
                                          மாமூலனார்,அகம்.61:1,2
கூற்றத்தாலே உயிர் கொள்ளப்பட்டு இறக்காமல் பிறர் தம்  பொருளைப்பெற்றுப் பயன் கொள்ளுமாறு இறந்தோர் நல்வினை செய்தோராவர்.
கூற்றம் கோளுற விளிதலாவது - ஒருவருக்கும் பயனின்றி வறிதே மரித்தல். பிறர் கொள விளிதல் - பிறர்க்குத் தம் பொருளை உதவிப் பயன்பட்டு மரித்தல். இதற்கு அமர்க்களத்தில் உயிர் துறத்தல் என்று பொருள் கொள்வர், நச்சினார்க்கினியர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக