ஞாயிறு, 13 ஜூன், 2021

தன்னேரிலாத தமிழ் -273.

 

தன்னேரிலாத தமிழ் -273.

557

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு.


மண்ணில் மழைத்துளி இன்றேல், உயிர்கள் எத்தகைய கொடிய துன்பத்தைத் துய்க்குமோ,  அத்தகைய கொடிய துன்பத்தை மக்களுக்குத் தரக்கூடியது, அரசனின் அருள் இல்லாத ஆட்சிமுறை.


அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது

பெரும்பெயர் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப்

பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.” ~ சிலப்பதிகாரம், 28.


ஆற்றலுடைய அரசர்கள் முறையாக ஆட்சி செய்தாலன்றிப் பெரும் புகழுடைய பெண்டிர்க்குக் கற்பு நெறியும் சிறப்பாக அமையாது என்பது, பண்டைய சான்றோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக