செவ்வாய், 29 ஜூன், 2021

 

தன்னேரிலாத தமிழ் - 279.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு -1

...................................................

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின். – 1330.  

  

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே!-வள்ளுவர்

ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!

                                                               (அறிவுக்கு)

உடலுக்கு உயிர் போலே!

உலகுக்கு ஒளிபோலே!

பயிருக்கு மழை போலே!

பைந்தமிழ் மொழியாலே!

                                                                (அறிவுக்கு)

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே!

அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே!

அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே

அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே!

                                                                     (அறிவுக்கு)

வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது!

மனம்மொழி மெய்இனிக்க வார்த்திட்ட தேனது!

வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது!-எம்

மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக்கண்டது!

                                        -கவிஞர் அ. மருதகாசி - படம்: அறிவாளி, 1963.

2 கருத்துகள்: