ஞாயிறு, 31 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –358. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –358. .கன்னி முத்தம்....!

……………….18………………

அழியா உலகில்

அழியும் உயிரே

நீர்க்குமிழி போலும்

வாழ்க்கை

நின்றதா நெடியதா

அறிவார் யாரே?

நாளையே வரும்

நரையும் திரையும்

வாதம் வாட்டும்

கபம் கட்டும்

விழுது நெய்போல்

கோழை வழியும்

ஊன்றுகோல் ஒன்று கொண்டு

நடக்கும் நடை தளரும்

சேர்த்து வைத்த

செல்வம் சிதறும்

கண்வலைப்பட்ட

காமக் கன்னியர்

கழுத்தைச் சுற்றிய

பாம்பாய்த் தோன்றுவர்

எலும்பும் தோலும்

எண்சாண் உடம்பாகும்

எனவே

இளமை கழியும் முன்னே

இன்பம் பெறுவாய் மனமே..!

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக