தமிழமுது –181– தொல்தமிழர் இசை மரபு:41.
தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர்.
தொல்காப்பியம் : ஆய்வுரை :- கலை வளர்ச்சி:
தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாட்டில் பல கலைகளும் சிறந்து வளர்ந்திருந்தன. இக்காலத்தினர் நாடகம் , இசை, நடனம் போன்றவைகளையே கலைகள் என்று கருதினர். கற்றுக்க்கொள்ளப்படுவன வெல்லாம் கலைகள். நாம் அணியும் ஆடைக்குக் கலையென்றே ஒரு பெயர். ஆகவே, நெசவும் ஒரு கலை. மக்கள் வாழ்வுக்குத் துணை செய்யும் தொழில்கள் யாவும் கலைகள்தாம். இதுவே பண்டைய தமிழர்கள் கொள்கை. அறுபத்து நான்கு கலைகள் என்று சொல்லப்படுகின்றன. இந்த அறுபத்து நான்கு கலைகளும் அறுபத்துநான்கு தொழில்கள். இந்த அறுபத்துநான்கு தொழில்கள் இவைகள் என்பதை சுக்கிரநீதி என்னும் வடமொழி நூலிலே காணலாம்.
கூத்தும் பாட்டும்:
இசை, நடனம், நாடகம் இவைகளையே உயிர் வாழ்க்கைக்குரிய தொழில்களாகக் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். இவர்கள் இத்தொழில்களைச்
செய்து வாழும் தனி வகுப்புனராகவே வாழ்ந்தனர்.
கூத்தர் என்பவர் ஒரு பிரிவினர். இவர்களுடைய தொழில் கூத்து. கூத்தில் குதித்தல் - கூத்து. கூத்தில் இரண்டு வகை உண்டு கதை தழுவிய கூத்து ; கதை தழுவாமல் பாட்டின் பொருளுக்கேற்ப அபிநயம் பிடித்தாடும் நாட்டியம், இருவகைக் கூத்துக்களையும் நடத்திக்காட்ட வல்லவர்களே கூத்தர்கள். இன்றும் கூத்தாடி என்ற ஒரு வகுப்பினர் தமிழ் நாட்டில் இருக்கின்றனர். பல் கோயில்களிலே திருவிழாக்களின் முடிவிலே கூத்தாடுவார்கள். பல கோயில்கள் இவர்கட்குக் காணியாட்சியாக உண்டு. இவர்கள் பண்டைக் கூத்தர் வழியினராக இருக்கலாம்.
பாணர் என்பவர் மற்றொரு பிரிவினர் பாண் - யாழ் பண்ணிலிருந்தே பாண் பிறந்தது. பண் -
இசை. பண்ணாகிய இசையைத்தரும் கருவியைப் பாண் என்று வழங்கியிருக்கலாம். பாண் வாசிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் பாணர்கள். யாழின் மூலம் இசை விருந்தளிப்பதில் இவர்கள் வல்லவர்கள். இவர்களில் பெண்களைப் பாடினி என்று அழைப்பது வழக்கம் பாணர் வீட்டுப் பெண்கள் வாய்ப்பாட்டில் வல்லவராயிருந்தனர், இதனால்தான் ஆண்களைப் பாணர் என்றும் பெண்களைப் பாடினி என்றும் அழைத்திருக்கின்றனர்.
பொருநர் என்பவர்.......
.........................................தொடரும்........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக