செவ்வாய், 13 ஜனவரி, 2026

தமிழமுது –183– தொல்தமிழர் இசை மரபு:43. .. தொல்காப்பியம் : ஆய்வுரை :- கலை வளர்ச்சி:

 தமிழமுது –183– தொல்தமிழர் இசை மரபு:43. 

தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர். 

      தொல்காப்பியம் : ஆய்வுரை :- கலை வளர்ச்சி: 

 

      நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் (தொல்.பொ. அக.56.)  

நாடக வழக்கம் என்பது புனைந்துரைக் கதையை நாடகமாக நடத்துவதுஇல்லாதவனைத் தலைவனாக - அதாவது கதைநாயகனாக வைத்து - மக்கள் வாழ்க்கையைச் சித்திரிக்கும் பல நிகழ்ச்சிகளைச் சேர்த்து எழுதி நடிக்கப்படுவதே நாடகமாகும்உலகியல் வழக்கம் உலகிலே நடைபெறும் உண்மை நிகழ்ச்சிகளைக்கூறுவது. 

 

    ாடக நாடக வழக்கத்தைப் பின்பற்றிப் பாடல்கள் பாடுவதும்உலகியல் ழக்கத்தை அமைத்துப் பாடல்கள் பாடுவதும் பண்டைத் தமிழர்கள் வழக்கம். 

இசைக் கருவிகள்: 

இசைக்குரிய கருவிகளைத் தோற்கருவிதுளைக் கருவிநரம்புக்கருவிஞ்சக்கருவி என்று நால்வகையாகக் கூறுவர்பறைமுழவுமுரசுதண்ணுமை போன்றவைகள் தோலால் செய்யப்படும் கருவிகள். குழல் போன்றவைகள் துளையிட்டுச் செய்யப்படும் கருவிகள்யாழ் போன்றவைகள் நரம்புகளால் நாதம் எழுப்பப்படும் கருவிகள்தாளம் போடுவதற்குச் செய்யப்படும் ஜாலரா - கஞ்சக கருவி. 

 

இத்தகைய கருவிகளைச் செய்யும் கலையும் இசைக்கலையிலே வல்லவர்களானவர் தமிழர்களிடம் இருந்திருக்க வேண்டும்ஓவியம் முதலிய கலைகளிலும் தமிழர்கள் உயர்ந்திருந்தனர்ஆகவேதொல்காபியர் காலத்தில் தமிழர்கள் பல கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தனர் என்பதில் ஐயமில்லை.  

(சாமிசிதம்பரனார்தொல்காப்பியத் தமிழர்,2002.)   

 

      தொல்காப்பியர் கூறும் பாட்டு: பாட்டு என்பதற்கு அடியின் சிறப்பே முதன்மை என்கிறார். “அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே “ 1292. 

பண்ணத்தி: “ பாட்டிடைக் கலந்த பொருளவாகிப் பாட்டின் இயல் பண்ணத்தி இயல்பே.” -1436. அஃதாவது பாட்டிடைக் கலந்த பொருளை யுடையனவாய்சிற்றிசையும் பேரிசையும் ஆகி இசைத்தமிழில் கூறப்பெறுவன பண்ணத்தியின் இயல்பு.என்பார்பண்ணத்தி 2*6 - ஆகப் பன்னிரண்டு அடிகளை உடையதாக வரும்; அதைவிட மிக்க அடிகளைப் பெற்று வந்தாலும் தவறில்லை என்றாராக.  

    

.........................................தொடரும்........................................ 

  

 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக