வியாழன், 12 பிப்ரவரி, 2026

தமிழமுது –207– தொல்தமிழர் இசை மரபு:67. .... வள்ளைப் பாட்டு - தொடர்ச்சி.

 தமிழமுது –207– தொல்தமிழர் இசை மரபு:67.  

6.  கலித்தொகை:- வள்ளைப் பாட்டு - தொடர்ச்சி.  

                 தோழிஇயற்பழித்தல் 

தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை.) 

 “காணிய வா - வாழிதோழி வரைத் தாழ்ப  

 வாள்நிலம் கொண்ட அருவித்தே நம் அருளா  

 நாணிலி நாட்டு மலை.”  

        தோழி...!  வாழியநம்மை அருளாது கொடுமை செய்தான் ; நாணமின்றியும் இருந்தனன் ; அவனது நாட்டின் மலையாய் இருந்தும் பக்க மலையிலே தாழ்ந்து ஒள்ளிய நிறம் கொண்ட அருவியைக் கொண்டுள்ளதேஇதன் காரணத்தை நாம் மனத்தான் ஆராய்வதற்கு வா.... எனத் தோழி இயற்பழித்தனள்.  

தலைவி இயற்பட மொழிதல் 

 (தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை.)   

 ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ  

 ர்வு உற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்  

 அறம்புரி நெஞ்சத்தவன்.”  

  ஒரு பக்கம் சாயாத நேர்மையினை உடையது துலாக்கோல் ; அது போல அவனும் ஆராய்ந்து அறத்தையே விரும்பும் நெஞ்சத்தை உடையவன் ; தன்னான் நுகரப்பட்டார் நெஞ்சம் அழியுமாறு விடுவேனா..? விடமாட்டான் காண் , எனத் தலைவி இயற்பட மொழிந்தாள்.  

                தோழி  

 தண்நறுங் கோங்கம் மலர்ந்த வடயெல்லாம்   

பொன் அணி யானை போல் தோன்றுமே - நம் அருளாக்  

 கொன்னாளன் நாட்டு மலை.”  

 நம்மை அருளிஇல்லறப்பயனை நுகராமல் , பயனில்லா வாழ்க்கையை நடத்துபவன் மலியாய் இருந்தும் , தண்ணிய மணமுடைய கோங்கு மலர்ந்துபக்க மலையெல்லாம் பொன்னால் ஆன ஆரம் அணிந்த யானைகள் போலச் சிறந்து தோன்றின ; இதற்குக் காரணம் என்ன..? எனத் தோழி இயற்பழித்தாள் 

 

தலைவி 

“ கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ - தன்மலை  

 நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்குத்   

தேர் ஈனும் வண் கையவன்,”--10 –21.   

தன் கொடையை விரும்பி வந்தோர்க்குத் தேரைக் கொடுக்கும் வண்மை கொண்ட கைகளை உடையவன் ; தன் மலை நீரினும் மென்மை உடைய உள்ளத்தான் ; நம்மை மணந்து கொள்ளாமல் இருப்பானோ..? நம்மைக் காம நோயால் வருந்த விடுவானோ..? விடான்...; வரைவன் எனத் தலைவி இயற்பட மொழிந்தாள்.  

...................பாடல் தொடரும்............................................. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக