திங்கள், 21 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

கள்ளூர் என்னும் ஊரின் கண் நடந்த நிகழ்ச்சி.....
தொல்புகழ் நிறைந்த பல்பூங்கழனிக்
கரும்பமல் படப்பைப் பெரும் பெயர்க் கள்ளூர்த்
திரு நுதல் குறுமகள் அணி நலம் வவ்விய 
அறன் இலாளன் அறியேன் என்ற 
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறி ஆர்பெருங் கிளை செறியப் பற்றி
நீறு தலைப் பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே
                        மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்,அகம். 256:14-21
அழகு விளங்கும் பழைமையான புகழ்மிக்க, பலவகையான பூக்கள் நிறைந்த வயல்களையும் கரும்பு நிறைந்த தோட்டங்களையும்  உடைய மிக்க சிறப்பு வாய்ந்த கள்ளூர் என்னும் ஊரின் கண், அழகிய நெற்றியினை உடைய இளையாள் ஒருத்தியின்  அழகிய நலத்தினைக் கவர்ந்துண்ட அறநெறி நில்லான் ஒருவன் பின் அவளைக் கை விடுத்து அவளை அறியேன் என்று கூறிய நீதியில்லாத கொடிய சூளினை, அவர்தம் கூட்டம் உணர்ந்த சான்றாவாரை (சாட்சியர்) வினவி உணர்ந்து, அவனை த் தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையில் இறுகப் பிணித்து நீற்றினை அவன் தலையில் பெய்த காலத்தே சிறப்பு மிக்க அவையின்கண் ஆரவாரம் பெரிதாயிற்று.
மூன்று கவராய  கிளைகளின் நடுவே வைத்துப் பிணித்தலும் நீறு தலைப்பெய்தலும் அஞ்ஞான்று குற்றத்திற்கு விதிக்கும் தண்டகளாம் என்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக