வெள்ளி, 2 அக்டோபர், 2020

 

 தன்னேரிலாத தமிழ் - 158

512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.


பொருள் உற்பத்திக்கான இடையூறுகளை ஆராய்ந்து  நீக்கி, நாட்டின்  பொருள் வருவாயைப் பெருக்க வல்லவனே வினை செய்தற்கு உரியவனாவான்.


செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்

இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ.கலித்தொகை, 14.


அறவழியிலிருந்து மாறுபட்டுப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாகி அழிவைத்தரும் என்ற உண்மையை அறிய மாட்டாயா..?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக