வியாழன், 22 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 166

 

தன்னேரிலாத தமிழ் - 166

974

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

கற்பு நெறி வழுவாது தன்னைக் காத்துப் பெருமை பெறும் மகளிரைப்போல், ஒருவன் தன்னுடைய தனிமனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவானாயின் அவனும் பெருமை பெறுவான்.

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்

உறுதிக்கு உறுதி உயிர் ஓம்பி வாழ்தல்

அறிவிற்கு அறிவு ஆவது எண்ணின் மறுபிறப்பு

மற்று ஈண்டு வாரா நெறி.—அறநெறிச்சாரம்.

ஆராய்ந்து பார்த்தால் தன்னிடத்தில் குற்றங்குறைகள் இருக்குமாயின் ஒருவன் அவற்றை உணர்ந்து தன்னைத்தானே நொந்து கொள்ளலே அஞ்சாமையாம் ; பிற உயிர்களை மதித்துப் போற்றிப் பாதுகாத்து வாழ்தலே நல்ல செயலாம் ; இவ்வுலகில் மீண்டும் வந்து பிறந்து உழலாமல் இருப்பதற்குத் துணைசெய்யும் உயர்ந்த நெறியின்கண் நின்று ஒழுகுதலே சிறந்த அறிவாம்,

1 கருத்து: