வெள்ளி, 23 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 167

 

தன்னேரிலாத தமிழ் - 167

1028

குடிசெய்வார்க்கு  இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்.

தான் பிறந்த குடியின் பெருமையை உயர்த்த நல்ல நேரம் என்று ஒன்றில்லை ;  நல்ல நேரம் வரட்டும் என்று சோம்பி இருந்தால் மானம் அழிய, பிறந்த குடியின் பெருமையும் கெட்டு அழியும்.

கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல்

எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர்ஒல்லை

இடுநீற்றாற் பையவிந்த நாகம்போல் தத்தம்

குடிமையான் வாதிக்கப் பட்டு.”—நாலடியார்.

மறைமொழி ஓதி இடும் திருநீற்றால் விரித்த படத்தை விரைந்து சுருக்கிக் கொள்ளும் பாம்புபோல், பெரியோர் தங்கள்  உயர் குடிப் பிறப்பின் பெருமையால் வருத்தமுற்றுக் கீழ் மக்களின் வாயிலிருந்துவரும் கல் எறிந்தாற் போன்ற கொடுஞ் சொற்களை எவரும் அறியுமாறு பொறுத்துத் தம் பெருமையைக் காப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக