திங்கள், 23 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 176

 

தன்னேரிலாத தமிழ் - 176


யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த வேட்ட த்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டு ….”புறநானூறு, 214.


யானையை வேட்டையாடச் சென்றவன் எளிதாக அதனைப் பெறவும் கூடும் ; குறும்பூழ்ப் பறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு ;  அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் நல்வினை ஆற்றியோர் உயர்ந்த உலகில் இன்பம் அடைதல் கூடும்.

1 கருத்து: