ஞாயிறு, 29 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-182.

 

தன்னேரிலாத தமிழ்-182.

இன்று இவ்வூர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்

நின்றதன் எவ்வநோய் என்னையும் மறைத்தாள்மன்

வென்ற வேல்நுதி ஏய்க்கும் விறல்நலன் இழந்து இனி

நின்றுநீர் உகக் கலுழும் நெடுபெருங் கண் அல்லாக்கால்.”

-கலித்தொகை, 124.

 இன்று இவ்வூர் அலர் தூற்றுகின்றது ; இவள் துன்பத்தை அறியாதவனாக இருக்கின்றாய் ! நீ, இவளைத் துறந்தமையின், தன்னிடத்தே நிலைபெற்றிருந்த வருத்தத்தை உடைய காமநோயை, என்னிடமும்  மறைத்தாள் ; வெற்றிகொண்ட வேலினது முனையைப் போன்று, தன் ஆற்றலையும் அழகையும் இனி இழந்து, நீர் நின்று உகும்படியாக, நெடிய பெரிய கண்கள் கலங்குகின்றனவே, இதனை மறைத்தாள் அல்லவே…! கண்கள் புலப்படுத்தி விட்டனவே…! –தோழி கூற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக