செவ்வாய், 24 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-177.

 

தன்னேரிலாத தமிழ்-177.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி.” ---நல்வழி, 2.

மனத்தால் ஆராய்ந்து சொல்கின்றபோது கடல் சூழ்ந்த இப்பூவுலகில் இரண்டு சாதிகளே உள்ளன. எக்காலத்தும் நடுநிலையான மனத்தோடு வாழ்ந்து நல்ல நெறிவழியாகப் பொருளீட்டி வறியவர்களையும் ஆதரவற்றவர்களையும் காக்கும் தன்மை உடையவர் உயர் சாதியினர் ; தன்னிடம் பொருள் இருந்தும் உதவும் தன்மையற்று இருப்பவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று  அறநூல்கள் கூறும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக