வெள்ளி, 27 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-180.

 

தன்னேரிலாத தமிழ்-180.

 மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு

விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை

அருங்கரை நின்ற உப்புஒய் சகடம்

பெரு பெயல் தலைய வீந்தாங்கு இவள்

இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. “குறுந்தொகை, 165.

 நெஞ்சே…! ஏறுதற்கரிய கரையில் நின்ற உப்பு வண்டியில் பெரிய மழை பொழிந்ததனால்  உப்பு அழிந்ததைப்போல, இவளது கரிய கூந்தலின்  இயற்கை அழகைக்கண்டு, மறுக்கப்பட்டோமென்று, அன்பு ஒழியாக் காமத்தால் நாண் அழிந்து, கள்ளுண்டு களித்ததன் மேலும்  கள்ளை விரும்பி உண்டாற்போல,  நீ அவளை ஒருமுறை விரும்பியதன்  பின்னும், மேலும் விருப்பத்தை அடைந்தாய்.  தலைவன் கூற்று.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக