திங்கள், 3 பிப்ரவரி, 2025

 

சான்றோர் வாய் (மைமொழி : 140. அறிவியல்

சிந்தனைகள்  - சித்தர் மரபு. 

 

சித்தர்கள் : சித்தி பெற்றவர்கள் பேறுபெற்றவர்கள்வீட்டின்பம் பெற்றோர்அனுபூதிஞானம் பெற்றவர்கள்சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

சித்தர் மரபின் தொடர்ச்சி : திருமூலர் வழியில் தோன்றியவர்கள்,  சைவ சமயக்குரவர்கள் நால்வர் , ஆழ்வார்கள் , கருவூர்ச் சித்தர், குகை நமச்சிவாயர், மெய்கண்டார், சிவப்பிரகாசர், தாயுமானவர், பட்டினாத்தார் முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

 

தமிழ் நாட்டில் சமயத்துறையில் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து முற்போக்கான மனிதநேயச் சிந்தனைகள் தோன்றிப் படிப்படியாக வளர்ந்தன. வைதீக தர்மம், பிராமணிய ஆதிக்கம், சாதிக்கொடுமைகள்,இவற்றை எதிர்த்து சித்தர்கள் வெகுண்டெழுந்து கலகத்தைத் தொடங்கினர். சித்தர்கள் ஓர் இயக்கமாகவே செயல்பட்டனர்.

 சித்தர்களின் ஞான நூல்கள் பல உள்ளன. சிவ வாக்கியார் பாடல், பாம்பாட்டிச் சித்தர் பாடல், இடைக்காட்டுச் சித்தர் பாடல், அகப்பேய்ச் சித்தர் பாடல், அழுகணிச் சித்தர் பாடல், திருவள்ளுவர் ஞானம், அகத்தியர் ஞானம்,  சட்டைமுனி ஞானம், காகபுசுண்டர் ஞானம், கொங்கணர் வாலைக்கும்மி  ஒளவையார் ஞானக் குறள்,  ஞான வெட்டியான் நூல்களும் முதலியன குறிப்பிடத்தக்கவையாகும்.

 

பட்டினத்தடிகள்

முதற் சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம், எனத் தமிழர் வாழ்ந்த  சிறப்புமிக்க வாழ்வைப்பற்றி,

முதற்சங்கம் அமுதூட்டும் மொய்ங்குழலார் ஆசை

 நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்கடைச்சங்கம்

ஆம்போ தது ஊதும் அம்மட்டோ இம்மட்டோ

நாம்பூமி வாழ்ந்த நலம்.” என்றார்.

 

பாம்பாட்டிச் சித்தர் கூறுகிறார்….

 :அறுபத்துநாலு கலையாவும் அறிந்தோம்

     அதற்குமேல் ஒருகலையன தறிந்தோம்

மறுபற்றுச் சற்றுமிலா மனமு முடையோம்

      மன்னனே ஆசானென்று ஆடுபாம்பே.”

 ஆயகலைகள் அறுபத்துநான்கு என்பர். சித்தர்களோ அதற்கு மேலும் ஒரு வித்தையைப் பயின்றிருந்தார்கள் அஃதாவது….


 காலனெனும் கொடிதான கடும்பகையைநாம்

     கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம்

தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்

     தற்பரங் கண்டோமென்று ஆடாய் பாம்பே.”


 சித்தர்கள் கற்பம் என்ன என்பதை கண்டிருந்தனர். காலத்தை வென்றிருந்தனர், எனவே அவர்கள் மக்களுக்கு மருத்துவத்தைத் தொண்டாகக் கருதிச் செய்தனர்.


சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்

சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்

 வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்.’


 சித்தர்கள் மருத்துவத்துடன் மக்களின்

 மூடத்தனத்தையும் களைந்திருக்கின்றனர்.

 

குதம்பைச் சித்தர்:

சித்தர்கள் முத்தமிழிலும் வித்தகராய் விளங்கியதோடு தமிழைத் தெய்வமாகப் போற்றினர்  என்பதும்…….


முத்தமிழ் கற்று முயங்கும் மெய்ஞ் ஞானிக்கு

சத்தங்கள் ஏதுக்கடிகுதம்பாய்

சத்தங்கள் ஏதுக்கடி.

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு

ஏகாந்தம் ஏதுக்கடிகுதம்பாய்

ஏகாந்தம் ஏதுக்கடி.

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்

கோலங்கள் ஏதுக்கடிகுதம்பாய்

கோலங்கள் ஏதுக்கடி!

  சித்தர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல! அறிவியலின் தூதர்கள். அறியாமையைச் சாடியவர்கள். சாதிப் பிரிவைச் சாடியவர்கள். அறிவுச் சுடராய் ஒளிர்ந்து மக்களின் பிணியை, சாக்கடை பேதமையை அகற்றியவர்கள்.

சித்தர் மரபு ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;தொடரும்…………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக