திங்கள், 16 நவம்பர், 2020

தொல்தமிழரோடு தோன்றிய முருகன்...!

 தொல்தமிழரோடு தோன்றிய முருகன்...!   

மன்ற மராஅத்த பேஎம்முதிர்கடவுள்

கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்

கொடியர் அல்லர் எம் குன்றுகெழு நாடர்

பசைஇப் பசந்தன்று நுதலே

நெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.—குறுந்தொகை, 87.

ஊர்மன்றத்தில் உள்ள கடம்ப மரத்தில் உறைகின்ற, அச்சமூட்டும் பழமை வாய்ந்த கடவுள், கொடுமையுடையாரைக் கொல்லும் என்பர். குன்றுகள் பொருந்திய நாட்டின் எம் தலைவர், சிறிதும் கொடுமை உடையரல்லர். அவர் எம்மைப் பிரியலாகாது என்பதற்காக என்னுடைய நுதல் பசலை பூத்தது, பிரிந்தால் உள்ளம் நெகிழும் என்பதைக் காட்டுவதற்காக என்னுடைய பெரிய தோள்கள் மெலிந்தன.

1 கருத்து: