வியாழன், 11 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –360----மழை - அறிவியல்

 

தன்னேரிலாத தமிழ் –360----மழை  - அறிவியல்

38. மழை  - அறிவியல் – Origin of Rain

               மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில்இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின்வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களைஅடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகிவிடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும்ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.”   ---விக்கிபீடியா.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் அறிவு

என்றூழ் உறவரும் இருசுடர் நேமி

ஒன்றியன்சுடர் நிலை உள்படுவோரும்

                               --- நப்பண்ணனார், பரிபாடல்.19: 46, 47

என்றூழ்ஞாயிறு, நாண்மீனும் பிற மீனுமாகிய இருவகை மீன்களும். ஞாயிறு முதன்மையாகப் பொருந்த இயங்கும். இவ்வடிகளானே பண்டைக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண் உள்ள நாள், கோள் முதலியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பொதுவிடங்களிலே ஓவியமாகவும் வரைந்து மாந்தர்க்கு அறிவுறுத்தி வந்தமை உணரப்படும். நாள் மீன்களையும் விண்மீன்களையும் உடைய சுடர்ச் சக்கரத்தைப் பொருந்தி ஞாயிறு முதலாக வரும் கோள்களினது நிலைமையை விளக்கி ஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியங்களைக் காண்பர். ………தொடரும்………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக