சனி, 27 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –366 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –366 : குறள் கூறும்பொருள்பெறு.


49

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று .


     அறம் என்று சொல்லப்படுவது  இல்லறத்தையே !  இல்லறமே நல்லறமாகும் ;  அஃதும்  பிறரால் பழிக்கப்படும் குற்றம் இல்லாதவழி இயங்குமானால் மிகவும் நன்றாகும்.


அன்பும் மடனும் சாயலும் இயல்பும்

என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி

 இன்றே இவணம் ஆகி …” --- அகநானூறு, 225.


 நெஞ்சே..! தலைவியின் அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் உயிரை மகிழ்விக்கும் இனிய சொல்லும் மனம் ஒன்றிய கொள்கையும் பிறவும் ஒரே தன்மை உடையதாய் என்றும் இருக்க, இன்று இவ்விடத்தே இருந்து மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக