திங்கள், 29 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –368 : குறள் கூறும் ”பொருள்” பெறுக. 61

 

தன்னேரிலாத தமிழ் –368 : குறள் கூறும்பொருள்பெறு.


61

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.


யாம் அறிந்தவரையில் ஒருவன் தான் அடைய வேண்டுமென்று விரும்புகிற செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம் என்பது நல்லறிவு உடைய குழந்தைகளைப் பெறுவதுதான்; இதைவிடச் சிறந்த செல்வம் வேறொன்று இருப்பதாக யாம் அறியவில்லை.


ஒடுங்கு ஈரோதி ஒண்ணுதல் கருவில்

எண் இயல் முற்றி ஈரறிவு புரிந்து

சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்

காவற்கு அமைந்த அரசு துறை போகிய

வீறுசால் புதல்வற் பெற்றனை…” --- பதிற்றுப்பத்து, 74.


வேந்தே..! நின் மனைவியின் கருவில் பத்துத் திங்களும் நிரம்பி, பேரறிவை விரும்பி, அன்பும் நாணும் ஒப்புரவும் கண்ணோட்டமும் வாய்மையும் நடுநிலைமையும் உளப்படப் பிற குணங்களும் குடிகளைக் காத்தற்குப் பொருந்திய அரசின் துறைகளை முற்றக் கற்றுணர்ந்த சிறப்புகளையும் உடைய நீ,  புதல்வனைப் பெற்றனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக