ஞாயிறு, 28 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –367 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –367 : குறள் கூறும்பொருள்பெறு.

60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.


நற்குண, நற்செய்கைகளால் பெருமைபெற்ற மனையாள், வீட்டிற்கு விளக்காவாள். அவ்விளக்கும் சுடர்விட்டு ஒளிர்வதும் நன்மக்களைப் பெறுவதால்தான் என்பர்.

மனையாளின் பெருமைக்கு அணியாவது தாய்மையே என்க.


கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய

புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்

நன்னராட்டி …. “ ------ அகநானூறு, 184.


 தெய்வத்தன்மை பொருந்திய கற்புடன் குடிக்குச் சிறப்பினைத் தரும் மகனைப் பெற்ற. நற்குணங்கள் நிரம்பிய இல்லத்தரசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக