வெள்ளி, 26 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –365 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –365 : குறள் கூறும் பொருள்பெறு.




 

34

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.  


அறம் எனப்படுவது யாதெனின் மனத்தில் அழுக்கற்ற தன்மையே ! மனத்துள் அழுக்கைச் சுமந்து (அல்வழியில் ஈட்டிய பொருளால் அறப்பயன் கொள்ள)அள்ளி வழங்குவதெல்லாம் வெற்று ஆரவாரமாகும் ; அஃது அறமென்று கொள்ளற்க. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் என்றார் திருவள்ளுவர்.


அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்

 செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.” --நாலடியார், 322.


 குற்றமற்றவர்கள் அறநெறியைப்பற்றி உரைக்கும்பொழுது, நற்பண்பில்லாத மூடர்கள் அவ்வுரையைக் காதுகொடுத்தும் கேட்கமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக