வியாழன், 29 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 9- பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 9- பேராசிரியர் சி. இலக்குவனார்

 

தமிழ் நாட்டில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லைஎன்று புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன் கூறியுள்ளமை பொய்யன்று;  ஆரியமும் ஆங்கிலமும் உரையாடல்களிலும் செய்தியிதழ்களிலும் மிகுதியாகக் கலக்கப்படுகின்றமையின் தமிழ்ச் சொற்கள் மறைந்து வருகின்றன. இதே நிலைமை நீடிக்கப்படின் இன்னும் சில ஆண்டுகளில் வடமொழியின் நிலையே தமிழுக்கும் ஏற்படக்கூடும்

செந்தமிழ் என்பது ஏட்டு மொழியாகிப் பின்னர் வழக்கிழந்த மொழியாகிவிடும். தமிழ் மறைந்த பிறகு தமிழர் என்ற பெயர் நமக்கேது?

இந்திய அரசு ஒற்றுமையின் பெயரால் இந்நிலைமையைத்தான் தோற்றுவிக்க விரும்புகிறது.   ---இலக்குவனார் இதழுரைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக