வெள்ளி, 30 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 10 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 10 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 

இன்று தேசிய மொழிகளின் ஒன்றான எவ்வகையிலும் வளர்ச்சி 

பெறாத இந்தியை வேண்டாத மக்கள் மீது வன்முறையில் 

மறைமுகமாகச் சுமத்தி மக்களிடையே வெறுப்புணர்ச்சியை 

வளர்த்துவருவது நாட்டு நன்மைக்கு ஒத்தது ஆகாது. இந்தியைப் 

பரப்புவதற்காகச் செலவழிக்கப்படும் பொருளையும் காலத்தையும் 

உழைப்பையும் மக்களுக்கு வேண்டப்படும் பிற இன்றியமையாத் 

துறைகளில் ஈடுபடுத்தினால் எவ்வளவோ நன்மைகள் 

விரைவில் விளையும். இந்தி மொழியின் முதன்மையைத் 

தடுப்பதற்கு என நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் 

அறப்போரில் ஈடுபட்டு அல்லல்பட்டு வருவதும் நின்றுவிடும். ---இலக்குவனார் இதழுரைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக