திங்கள், 28 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-15.

 

தாய்மொழி வழிக் கல்வி-15.

அன்று முதல்….

தமிழ்வழிக் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பி. விருத்தாசலனார் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் வழிக் கல்விக்குப் போராடிவருகிறார். 1990 இல் தஞ்சையில் தமிழ்வழிக் கல்வி மாநாட்டை நடத்தித் தமிழ் உலகுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.”ஆங்கில மொழி கற்பதில் தவறில்லை  ஆனால் பிற பாடங்களைத் தமிழில் கற்பிக்க வேண்டும். இதனை வலியுறுத்துவதே தமிழ்வழிக் கல்வி இயக்கம். ” என்றார்.

ஒரு நாட்டின், ஓர் இனத்தின், ஒரு புதிய சமுதாயத்தின் எழுச்சி முழக்கமாக இருக்க வேண்டிய மொழி அரசியல்வாதிகளின் வாக்கு அறுவடைக்குரிய கருவியாக மாறிவிட்டது. இந்நிலை மாறினால்தான் தாய்மொழி  தனக்குரிய இடத்தில் அதாவது தலைமை இடத்தில் அமர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக