சனி, 18 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -10

 

களப்பிரர் _ களப்பாள் :  கருநாடர்களந்தை-கூற்றுவனார் -10

 சைவசித்தாந்த சாத்திர உபதேசஞ் செய்தற்பொருட்டு எழுந்தருளிய சந்தான குரவருள் ஒருவரும் தில்லைவாழ் அந்தணருள் ஒருவருமாகிய உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருத்தொண்டர் புராணச் சாரத்தினுள்

“குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

   கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்

பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்

   பூசுரர்கள் கொடாது அகலப் புனிதன் ஈந்த

மன்றாடும் திருவடியே முடியாய்ச் சூடி

   மாநிலங் காத் திறைவனுறை மாடக்கோயிற்

சென்றசை யுடன் வணங்கிப் பணிகள் செய்து

    திருவருளாலமருலகஞ் சேர்ந்து ளாரே.” எனவும்

திருவாவடுதுறை ஆதீனத்துச் சிவஞான சுவாமிகள் அருலிச் செய்த திருத்தொண்டர் திருநாமக் கோவையுள்

“விறற் களந்தைக் கூற்றுவனார்” எனவும்

சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் பெரியபுராணத்துள்

“ துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று சூலப் படையார்

நன்னாமம் அந்தத் திருநாவினாலும் நவிலும் நலமிக்கார்

பன்னாள் ஈசனடியார்தம் பாதம் பரவிப் பணிந்தேத்தி

முன்னானாகிய நற்றிருத் தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்.” எனவும்

…………………..தொடரும்………………18/3..  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக