ஞாயிறு, 12 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 4.

 களப்பிரர் _ களப்பாள் : 4.

வேள்விக்குடிச் செப்பேடு, தளவாய்புரச் செப்பேடு ஆகியவற்றை ஆராய்ந்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூறுவதைத் தளவாய்புரச் செப்பேடு களப்பாழர் (களப்பாளர்) என்று கூறுகிறது.  “கடிராறு கவனலங்கல் களப்பாழர் குலங்கலைந்தும்என்றும்களப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோன் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்என்று தளவாய்புரச் செப்பேடு (வரி, 131-132) கூறுகிறது. எனவே களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்று கூறுகிறார்.

மேலும் அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமிகளப்ரர், களப்பரர், களப்பிரர், களப்பாளர், களப்பாழர் என்றெல்லாம் அழைக்கப்படுவோர் களப்பிரர்களே. இவர்கள் தமிழர் அல்லர் திராவிட இனத்தைச் சார்ந்த கன்னட வடுகர்.”  என்றும் கூறுகிறார். ………………………. தொடரும்…………………………………….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக