புதன், 15 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்--7.

 

களப்பிரர் _ களப்பாள் :  கருநாடர்--7.

கல்லாடம்.

படை நான்குடன் பஞ்சவற் றுரந்து

மதுரை வவ்விய கருநட வேந்தன்

அருகர்ச் சார்ந்து நின்று அரன்பணி அடைப்ப.” –

நான்கு வகைப் படைகளுடன் வந்து பஞ்சவராகிய பாண்டியரை அகற்றிவிட்டு, மதுரையைப் பிடித்த கருநாடக வேந்தன் அருக மதத்தைச் சார்ந்திருந்த காரணத்தால் அரனாகிய சிவன் கோயில் வழிபாட்டை மறுத்துவிட்டனர் என்று , கல்லாடச் செய்யுள் கூறுகிறது.

மூர்த்தி நாயனார் புராணம்.

கானக் கடிசூழ் வடுகக் கருநாடர் காவல்

மானப்படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்

யானை குதிரைக் கருவிப் படை வீரர் திண்தேர்

சேனைக் கடலுங்கொடு தென்திசை நோக்கி வந்தாந்-(11)

 

வந்துள்ள பெரும் படை மண் புதையப் பரப்பிச்

சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன் வீரம்

சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்துமாற்றால்

பந்தப் பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான்.”-(12)

வடுகக் கருநாடர் நாட்டிலிருந்து நால்வகப் படையுடன் வந்து தமிழ் நிலத்தைக் கைப்பற்றினான், என்று  கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்லாடம் விரித்துரைக்கின்றது

………………………………. தொடரும் ………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக