சனி, 11 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 3.

 

களப்பிரர் _ களப்பாள் : 3.

தமிழக வரலாற்றில்இருண்ட காலம்என்று ஒரு காலப் பகுதியை வரலாற்றறிஞர்கள் சுட்டுகின்றனர். இது, கடைச்சங்க காலத்தின் பிற்பகுதியாகும். கி.பி. 250 முதல் 550 வரை தமிழகத்தைக் களப்பிரர்கள் அரசாண்டனர் என்பர்.

கடைச்சங்க காலத்தின் இறுதியில் அரசாண்ட சேர அரசன் கோக்கோதை மார்பன், கொங்கு நாட்டை ஆண்ட கணைக்கால் இரும்பொறை, பாண்டிய நாட்டை ஆண்ட தலையாலங்கானத்துச் செருவெண்ற நெடுஞ்செழியன், சோழ நாட்டை ஆண்ட செங்கணான் ஆகிய அரசர்களைப் போரிலே வென்று சேர சோழ பாண்டிய நாடுகளோடு துளு நாடு, கொங்கு நாடு, இரேணாடு ( பல்லவ நாட்டின் ஒரு பகுதி) ஈழ நாடு ஆகியவற்றையும் களப்பிரர் கைப்பற்றினர் என்கிறார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.

களப்பாளில் இருந்தவர்களே களப்பிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்களப்பாள்என்ற  சோழ நாட்டு ஊர் ஒன்றில் முற்காலத்தில் வாழ்ந்துவந்த அரசியல் தலைவன் ஒருவன்களப்பாளன்என்று சிறப்பித்து வழங்கப் பெற்றமையால் அவன் வழியினர் களப்பாளன் எனவும் களப்பராயர் எனவும் குடிப்பெயர் பெற்று, பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே தமிழராகிய களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரேயாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஒத்துக்கொள்ளத் தக்கதன்று என்று கூறுகிறார்.

................... தொடரும்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக