திங்கள், 13 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 5

 களப்பிரர் _ களப்பாள் : 5

ஆயினும் சிலர் களப்பிரர் தாய்மொழி கன்னடம் அல்ல என்றும் பாலிபிராகிருதம் அவர்தம் தாய்மொழி என்றும் கூறுவதை இவர்கள்  மறுக்கிறார்கள். ’வேள்விக்குடிச் செப்பேடுஅளவரிய ஆதிராஜரை அகல் நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னும் கலி அரைசன் கைக்கொண்டான்என்று கூறுகிறது. மூவேந்தர்களையும் வென்று ஈழத்தையும் வென்று சுமார் முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிரர் குறித்து அறிந்து கொள்ள, போதிய சான்றுகள் இல்லை. வரலாற்றுச் சுவடுகள் எதுவுமே இல்லாமல் தமிழகம் இருந்திருக்கிறது, அப்படியெனில் களப்பிரர்கள்  கலகக்காரர்களா / அரச மரபினர்களா..?

கன்னட தேசத்தின் வரலாறு (கன்னட இதிஹாஸ தர்ஸன்) எனும் நூலும் பழைய கன்னட சாசனமும் இப்போதைய சிரவணபெளகொள பகுதியே பழங்காலத்தில் களபப்பு நாடு என்று பெயர் பெற்றிருந்தது என்றும் களபப்பு நாடு களவர ராச்சியம் என்பது மைசூர் பிரதேசமே என்றும் கூறுகின்றன. களவர் நாடு, களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு சாசனங்களிலும் கூறப்படுகின்றன. இச்சான்றுகளினால் கன்னட நாட்டவராகிய  களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான களப்பிர நாட்டை அரசாண்டனர் என்று தெரிகிறது. அவர்கள் ஏறத்தாழ கி.பி. 250இல் தமிழகத்தைக் கைப்பற்றி அரசாண்டனர் என்கிறார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.
 ……………………………………தொடரும்…………………….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக