வியாழன், 23 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -14

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -14

 சோழநாட்டில் களப்பாள்

செங்கற்பட்டு ஜில்லா, செங்கற்பட்டு தாலுகாவில் உள்ள பொன்விளைந்த களத்தூரே, களந்தை என்று ஒருசாராரும் தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டித் தாலுகாவில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ர ஊரே களந்தை என்று வேறு ஒரு சாராரும்  கோயமுத்தூர் ஜில்லா, பொள்ளாச்சித் தலுகாவில் உள்ள பெரிய களந்தை என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். இவைகலின் வன்மை மென்மைகள ஆராய்வாம்.

 பொன்விளைந்த களத்தூர், களந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்பெறும். இவ்வழக்கைத் தொண்டைமண்டலசதகத்தால் அறியலாம். ஆனால், இவ்வூரில் உள்ள கோயிலின் பெயர், சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க்கோட்டத்துக் களத்தூர் பெருந்திருக்கோயில் என அவ்வூர்க் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஆதலால், இக்களத்தூர் திருவிசைப்பாப்பெற்ற கோயில் களந்தை ஆகாது.

தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டி தாலுகாவில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரில், அழகிய நாதசுவாமி கோயில், கயிலாசநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் என்னும் மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் அழகியநாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 23ஆம் ஆண்டு 204 ஆம் நாளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அவ்வூர் இறைவனை, களப்பாள் உடையார் திரு ஆதித்தேச்சரமுடையார் என்று குறிப்பிடுகிறது. களப்பாள், களந்தை என்று மருவி வருதலும் உண்டு ஆதலில் இந்தக் களப்பாள் ஆதித்தேச்சரமே கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும்அந்தணர் அழலோம்பு அலைபுனல் களந்தைஎனவும்…..

…………………..தொடரும்……………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக