செவ்வாய், 14 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 6.

 களப்பிரர் _ களப்பாள் : 6.

களபப்பு நாட்டைச் சேர்ந்த களப்பிரர்தான் சோழநாட்டுக் களப்பாளை உருவாக்கினார்களா? களப்பிரரை களவர்/ கள்வர் என்றும் குறிக்கிறதே?

களப்பாள் எனும் சொல் கள- களம்  என்னும் சொல்லடியாகலாம். தமிழர்தம் தொன்மை நிலப்பகுப்பில் மருதமும் ஒன்று. மருத நில மக்களுக்கு களமர் என்றும் பெயர். களமர் என்றால் உழவர் / வீரர் என்பதாம். களமர், களவர், கள்வர் ஆகிய சொற்கள் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் இருந்து வருகின்றன. கள்வர் குலத்தார் அரச மரபினர் ஆவர். கள்வர் என்பது கள்ளர் வகுப்பினைக் குறிபிதாகும். “ கள்ளர்கள் கருநாடகப் பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு அவர்களிடமிருந்து மகாராட்டியர் செளத் என்ற வரி வாங்கி வந்ததுபோல் ஒரு வரியும் வாங்கி வந்திருக்கின்றனர்என்கிறா அறிஞர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். சங்க காலத்தில் தமிழகத்தின் வடக்கிலிருந்த வேங்கடநாட்டை அரசாண்ட புல்லி என்ற அரசர்  ‘கள்வர் கோமான் புல்லி’ (அகம்.61) என்று அழைக்கபடுகிறார். வேங்கடமலை தொண்டையர்க்கு (தொண்டைமான்) உரியது. அறிஞர் மு. இராகவையங்கார் கள்வர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்கிறார்.  களப்பிரரும் பல்லவ அரசர் ஆண்ட தொண்டை மண்டலம் தவிர சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

…………………….தொடரும்………………… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக