சனி, 4 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -105


தன்னேரிலாத தமிழ் -105

இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னொடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே.”புறநானூறு.

பாரியே..! இப்பிறப்பின்கண் நீயும் நானும் நட்புடன் இன்புற்று இருந்தவாறு போல, மறுபிறப்பிலும் கண் முன்னே இடைவிடாது தோன்றும் நின் காட்சியோடு கூடி வாழ்தலை உயர்ந்த ஊழ் கூட்டுவதாகுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக