வெள்ளி, 10 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -111


தன்னேரிலாத தமிழ் -111

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதேதீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதேஅவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.வாக்குண்டாம்.

 தீய குணம் உடையவர்களைக் காண்பதும் ; அவர்களுடைய தீமை தரும் சொற்களைக் கேட்பதும் ; அவர்தம் தீமையான குணங்களை எடுத்துக் கூறுவதும் ; அவர்களோடு நட்புக் கொள்வதும் துன்பம் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக