வியாழன், 29 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 169

 

தன்னேரிலாத தமிழ் - 169

1075

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாஉண்டேல் உண்டாம் சிறிது.

அச்சப்பட்டுக்கிடப்பதே கீழ்மக்களின் இயல்பாகும். அஞ்சி ஒடுங்குவது ஒழித்து உழைத்துப் பொருளை ஈட்டவேண்டும் என்று ஆசைப்பட்டாலே  ஒரு சிறிதாவது அச்சம் ஒழியும்.  

அச்சம் உள்ளடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி

எச்சம் அற்று  ஏமாந்து இருக்கை நன்றே.”வெற்றிவேற்கை, 40.

அச்சத்தை மனத்தில் கொண்டு, கொஞ்சங்கூட அறிவில்லாத புதல்வர்களைப் பெற்றெடுப்பதைவிடக் குலம் தழைப்பதற்கு வழித் தோன்றல்கள் இல்லாமல் போனாலும் போகட்டும் என்று மகிழ்ச்சியாக இருப்பதே நல்லதாம்.   

1 கருத்து: