புதன், 11 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –448: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –448: குறள் கூறும்பொருள்பெறுக.


527

காக்கை கரவா கரைந்துன்னும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.

காகம், கிடைத்தவற்றை மறைத்துத் தான் மட்டும் உண்ணும் வழக்கம் உடையதன்று ;  தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும் பண்புடையது. அதுபோல், சுற்றம் சூழ வாழும் பண்புடையோர்க்கே ஆக்கமும்  உளதாகும்.


பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த

கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல்பட

அகல் அங்காடி அசைநிழல் குவித்த

பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை --- நற்றிணை, 258.


வந்த விருந்தினரைப் போற்றுவதற்காகப் பொன்னாலாகிய தொடியுடைய மகளிர் உணவு சமைத்தனர், அவ்வுணவில் ஒரு கவளம் எடுத்து முற்றத்தில் பலியாக இட்டனர். கொக்கின் நகம் போன்ற வெண் சோற்றைப் பசிய கண்ணையுடைய காக்கை உண்டு,  பின்  பொழுதுபடும் வேளையில் அகன்ற மீன் கடையில்,  அசைகின்ற நிழலிலே குவித்த,   பசிய இறால் மீனைக் கவர்ந்து உண்ணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக