திங்கள், 2 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –443: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –443: குறள் கூறும்பொருள்பெறுக


501

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும். 


அரசன் தனக்கு ஒருவனை உறுதுணையாகக் கொள்ள, அவன் மனத்துளவாகிய அறம் அறிதல், பொருள் ஆசை,  சிற்றின்ப வேட்கை , தன் உயிருக்கு அஞ்சும் அச்சம்  எனும் நான்கின் திறங்களை, ஆராய்ந்து அறிந்த பின்னரே,  அவனை வினையாற்ற உரியவனாகத் தேர்ந்து கொள்ளல் வேண்டும்.


நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்துப்

பட்டாம் பல பிறப்புத் துன்பம் என்று ஒட்டி

அறநெறி கைவிடாது ஆசாரம் காட்டிப்

பிறநெறி போர்க்கிற்பவர்.” –அறநெறிச்சாரம், 46.


ஆராய்ந்து கூறுமிடத்து, இப்புவியில் பல பிறப்புகள் எடுத்து, அவற்றால் அளவற்ற துன்பம் அடைந்தோம் என்று தெளிவித்து, துணிந்து அறநெறியைக் கைவிடாமல் கொண்டு ஒழுகச் செய்து, ஒழுக்கத்தினை உணரும்படி செய்து, தீய நெறிகளிலிருந்து நீக்குபவர்களே நட்பினர் என்று கூறப்படுவதற்கு உரியவர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக