ஞாயிறு, 22 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –451

 

தன்னேரிலாத தமிழ் –451


நெஞ்சில் நிறைந்த நினைவுகளோடு…!

      ஐயா நம்மாழ்வார் விளைநிலத்தில் விழுந்த வித்து, ஐயா,நெல் செயராமன் வழியில்  நேற்றும் இன்றும்…… தேசிய நெல் திருவிழா, (மே.21,22) திருத்துறைப்பூண்டியில்….!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெல் வகைகள்.


1)ஓத்திரம் நெல்


“ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி

மாய வண்ணனை மனன் உறப்பெற்று அவற்கு

ஓத்திர நெல்லின் ஓகந்தூர் ஈத்து…” –கபிலர், பதிற்றுப்பத்து.:7.


பல யாகங்களையும் பெரிய அறச்செயல்களையும் செய்து முடித்தவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். கரிய நிறமுடைய திருமாலைத் தன் மனத்துப் பொருந்தப் பெற்றவன்; அத் தெய்வத்திற்கு ஓத்திர நெல் என்னும் ஒருவகை நெல் விளையும் ஓகந்தூர் என்னும் ஊரினை இறையிலியாக அளித்தவன்.


2) கருடன் சம்பா…………………… தொடரும்…………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக