திங்கள், 23 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –453 – கருடன் சம்பா…!

 

தன்னேரிலாத தமிழ் –453 – கருடன் சம்பா…!


நெஞ்சில் நிறைந்த நினைவுகளோடு…!

      ஐயா நம்மாழ்வார் விளைநிலத்தில் விழுந்த வித்து, ஐயா,நெல் செயராமன் வழியில்  நேற்றும் இன்றும்…… தேசிய நெல் திருவிழா, மே.21,22 திருத்துறைப்பூண்டியில்….!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெல் வகைகள்

 

2) கருடன் சம்பா…!

“வளைக்கை மகடூஉவயின் அறிந்து அட்ட

சுடர்க்கடை பறவைப் பெயர்படு வத்தம்

சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து

உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து

கஞ்சமுக நறுமுறி அளைஇ பைந்துணர்

நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த

தகைமாண் காடியின் வகைப்படப் பெருகுவிர்” 

– கடியலூர் உருத்திரங் கண்ணனார், பெரும் பாணாற்றுப்படை:304-310.

 

மறைகாப்பாளர் மனைவியாகிய பார்ப்பனி, பதமறிந்து ஆக்கிய பறவைப் பெயர் பெற்ற நெற்சோற்றையும் சேதாவின்(சிவப்புப் பசு) நறிய மோரின்கண் எடுத்த வெண்ணெயில் வெந்த மிளகுப் பொடியும் கறிவேப்பிலையும்  கலந்து அட்ட மாதுளங்காய்ப் பொரியலையும் பசிய கொத்துக்களையுடைய நெடிய மாமரத்தினது நறிய வடுவினைப் பலநாளாகப் போட்டு வைத்த ஊறுகாயோடும் வகைப்பட ப் பெறுவீர்.


பறவைப் பெயர்படு வத்தம் (சோறு/ நெல்)என்றது கருடன் சம்பா என்னும் பெயருடைய நெல்லைக் குறிக்கும் என்பார் நச்சினார்க்கினியர். ஆகுதி பண்ணுதற்கு இந்த நெற்சோறே சிறந்ததென்று இதனைக் கூறினார்.


3) சாலி நெல் …………….தொடரும்………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக