திங்கள், 16 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –449: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –449: குறள் கூறும்பொருள்பெறுக.


538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.


சான்றோர் போற்றிப் புகழ்ந்த செயல்களையே செய்யவேண்டும் , அங்ஙனம்  செய்ய மறந்தார்க்கு எப்பிறவியிலும் நன்மை இல்லை.


தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில்

பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய

சிட்டர் என்ன சிட்டர் என்று ஏத்துவர் அல்லாரைச்

சிட்டர் என்று ஏத்தல் சிதைவு.”—அறநெறிச்சாரம், 42.


தன்னைப்பற்றியும் தன்னால் அறியத்தகும் பொருள்களைப் பற்றியும் உண்மையைக் கூறும், சீரிய அறம் உரைக்க வல்லாரை, ‘நிலைபெற்ற கல்வியறிவு நிரம்பிய சான்றோர், மிக உயர்ந்த பெரியோர்என்று உலகத்தார் பாராட்டுவர். அத்தகைமை இல்லாதவர்களைச் சான்றோர் என்று போற்றுவது கேடு பயப்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக